Reading Time: < 1 minute

கனடாவின் வான்கூவரில் திங்கள்கிழமை இரவு காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட 16 வயது சிறுமி, செவ்வாய்கிழமை காலை ஒரு வீட்டில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tamil Business Directory

கிழக்கு பெண்டர் மற்றும் ரென்ஃப்ரூ தெருக்களுக்கு அருகிலுள்ள ஒரு வீட்டிற்கு காலை 9 மணியளவில் பொலிஸார் அழைக்கப்பட்டனர்.

அந்த சிறுமி திங்கள்கிழமை இரவு காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அவரது காணாமல் போதல் தொடர்பாக நார்த் வான்கூவர் பொலிஸார் விசாரணை நடத்தி வந்தனர்” என பொலிஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சிறுமியின் மரணத்திற்கான காரணம் இதுவரையில் வெளியிடப்படவில்லை. சிறுமி எவ்வாறு இறந்தார், குற்றச்செயல் ஏதேனும் தொடர்புடையதா என்பதை கண்டறியும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் 604-717-2500 என்ற எண்ணில் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.