Reading Time: < 1 minute

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சர்ரே நகரின் செவரான் எரிபொருள் நிலையத்தில், நத்தார் தினம் காலை பொலிஸ் வாகனம் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Tamil Business Directory

இந்த சம்பவம் தொடர்பாக சுயாதீன கண்காணிப்பு அமைப்பு விசாரணையை ஆரம்பித்துள்ளது.

காலை சுமார் 6 மணியளவில் செவரான் எரிபொருள் நிலையத்திலிருந்து வெளியேறிக் கொண்டிருந்த சர்ரே பொலிஸ் சேவையின் (Surrey Police Service) உறுப்பினரின் வாகனம், பாதசாரியான அந்தப் பெண்ணை மோதியுள்ளது.

காவல்துறை சம்பந்தப்பட்ட மரணம் அல்லது கடுமையான காயங்களுக்கு வழிவகுக்கும் சம்பவங்கள் அனைத்தையும் விசாரிக்கும் விசாரணைக்குழு, இந்த சம்பவம் தொடர்பான விசாரணை ஆரம்ப கட்டத்திலேயே இருப்பதாக தெரிவித்துள்ளது.

சம்பவ இடத்திற்கு இரண்டு ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அங்கு முதலுதவி அளிக்கப்பட்டதுடன், தீவிர நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இருப்பினும், அவர் உயிரிழந்ததாக பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது. வியாழக்கிழமை பிற்பகலில் வெளியிடப்பட்ட குறுகிய அறிக்கையில், சற்ரி காவல்துறை சேவை அந்தப் பெண் “துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்” என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

சுயாதீன விசாரணை நடைமுறைகள் நடைபெற்று வரும் நிலையில், மேலதிக தகவல்களை வழங்க இயலாது” என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் அடையாளம் குறித்து எந்த விவரங்களும் இதுவரை வெளியிடப்படவில்லை; அவர் ஒரு வயது வந்த பெண் என்பதையே அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தை கண்ட சாட்சிகள் இருந்தால், 1-855-446-8477 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.