Reading Time: < 1 minute
Tamil Business Directory

ஒன்றாரியோவில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு மூன்று படிநிலைகளாக தளர்த்தப்படும் என ஒன்றாரியோ முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.
ஒன்றாரியோ முதல்வர் டக் ஃபோர்ட் மாகாணத்தை மீண்டும் திறக்கும் திட்டம் குறித்து, நேற்று (திங்கட்கிழமை) உரையாற்றினார்.
இதன்போது, ஒன்ராறியோ மாகாணம் ஒன்ராறியோவையும் பொருளாதாரத்தையும் மீண்டும் திறக்க மூன்று கட்டங்களைத் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.
ஒவ்வொரு கட்டமும் இரண்டு முதல் நான்கு வாரங்கள் நீடிக்கும் மற்றும் கொவிட்-19 தொற்றுகளில் ஏதேனும் அதிகரிப்பு ஏற்பட்டால் நிபுணர்களால் கண்காணிக்கப்படும்.





