Reading Time: < 1 minute
Tamil Business Directory
சட்பரியில் உள்ள ஹெல்த் சயின்சஸ் நோர்த் (எச்.எஸ்.என்), நாள்தோறும் அதிகரிக்கும் நோயாளிகளின் கூட்டத்தை குறைக்க புதிய தீர்மானமொன்றை தீர்மானித்துள்ளது.
குறித்த மருத்துவமனையிலிருந்து, குழந்தைகள் சிகிச்சை மையத்தை அகற்றுவதன் மூலம், நோயாளிகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என்ற முடிவுக்கு ஹெல்த் சயின்சஸ் நோர்த் நிர்வாகம் வந்துள்ளது.
இவ்வாறு ஹெல்த் சயின்சஸ் நோர்த்திலிருந்து குழந்தைகள் சிகிச்சை மையத்தை அகற்றுவதன் மூலம், 56 புதிய மருத்துவமனை படுக்கைகளை உருவாக்க முடியுமென மருத்துவமனை நிர்வாகம் நம்புகின்றது.
இதற்கு தற்போது, எச்.எஸ்.என் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டொமினிக் கிரோக்ஸ், ஒப்புதல் அளித்துள்ளார்.




