Reading Time: < 1 minute
Tamil Business Directory
எட்டோபிகோவில் இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 60 வயது முதியவர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று மாலை 7 மணியளவில் கிப்லிங் மற்றும் ஜென்தோர்ன் அவென்யூ அருகே, ரெக்ஸ்டேல் அவென்யூ வடபகுதியில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
விபத்தில் 60 வயதான ஒருவர் படுகாயமடைந்து அருகிலுள்ள அவசர நிலை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக டொரண்டோ போலீசார் தெரிவித்தனர்.
விபத்தில் ஈடுபட்ட மற்றொரு வாகனத்தின் 35 வயது ஓட்டுநர், சம்பவ இடத்திலேயே இருந்து போலீசாருடன் முழுமையாக ஒத்துழைக்கிறார் என கூறப்பட்டுள்ளது.
நடந்து வரும் விசாரணையினால், கிப்லிங் வீதி ஹின்டன் ரோடு மற்றும் ஸ்நேர்ஸ்ப்ரூக் டிரைவ் இடையில் இரு திசைகளிலும் முடக்கப்பட்டுள்ளது.




