Reading Time: < 1 minute

கனடாவில் விவாகரத்தாகி 55 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட ஒரு தம்பதியினர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

Tamil Business Directory

பிரிட்டிஷ் கொலம்பியாவின் விக்டோரியா பசி தீயில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது லைன் மற்றும் லான ஆகிய தம்பதியினரே இவ்வாறு 55 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

முதல் திருமண பந்தத்தின் பின்னர் 15 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இந்த தம்பதியினர் விவாகரத்து பெற்றுக் கொண்டுள்ளனர்.

பின்னர் வெவ்வேறு மாகாணங்களில் வாழ்ந்து வந்த இவர்கள் மீண்டும் இணைந்து கொண்டுள்ளனர்.

மகள் மற்றும் பேரப்பிள்ளைகளின் ஆசியுடன் இவர்கள் மீளவும் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.

புற்று நோயினால் பாதிக்கப்பட்டு மூன்று மாதங்களே உயிருடன் இருப்பார் என மருத்துவர்கள் கூறி இருந்த நிலையில் அவர் புற்றுநோயிலிருந்து மீண்டு மீண்டும் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளார்.

இருவரும் வாழ்க்கையை சந்தோஷமாக கழிப்பதாக தெரிவிக்கின்றனர்.