Reading Time: < 1 minute

கனடாவில் வீட்டுக்கு வெளியே தீ மூட்டிய பெண் ஒருவருக்கு பெருந்தொகை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Tamil Business Directory

கனடாவின் நோவா ஸ்கோட்டியா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணுக்கு சுமார் 29000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

காட்டுத்தீ பரவுகை காரணமாக மாகாணத்தில் தீ மூட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில் எவரின் மேற்பார்வையும் இன்றி அனுமதியும் பெற்றுக்கொள்ளாது வீட்டுக்கு வெளியே தீ மூட்டிய காரணத்தினால் குறித்த பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் காட்டுத் தீ பரவுகைகள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சில இடங்களில் காட்டுத் தீ கட்டுக்கு அடங்காத நிலையில் காணப்படுகின்றது.