Reading Time: < 1 minute

இலங்கை மத்திய வங்கியின் பெட்டகத்திலிருந்து 50 இலட்சம் ரூபாய் காணாமல் போயுள்ளதாக கோட்டை பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

Tamil Business Directory

குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக கோட்டை பொலிஸார் இன்று (புதன்கிழமை) காலை மத்திய வங்கிக்கு சென்றுள்ளனர்.

மத்திய வங்கியின் பல அதிகாரிகளினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த சம்பவம் தொடர்பாக பலரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.