Reading Time: < 1 minute

கனடாவில் மே மாத ஆரம்பத்திற்கு பிறகு, நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது.

Tamil Business Directory

இதன்படி கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 8,792பேர் பாதிக்கப்பட்டதோடு 40பேர் உயிரிழந்துள்ளார்.

கடந்த மே 3ஆம் திகதி 9,076பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதற்கு பிறகு கடந்த 24 மணித்தியாலத்தில் தான் அதிகப்படியான பாதிப்பு பதிவாகியுள்ளது.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 27ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 15இலட்சத்து 51ஆயிரத்து 072பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 27ஆயிரத்து 238பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 42ஆயிரத்து 021பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 405பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 14இலட்சத்து 81ஆயிரத்து 813பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.