Reading Time: < 1 minute

28.5 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான மெத்தாம்பேட்டமைனைக் கைப்பற்றியுள்ளதாக கனடா எல்லை சேவைகள் தெரிவித்துள்ளது.

Tamil Business Directory

கனேடிய அரசாங்கத்தின் கூற்றுப்படி, லொரி அல்பர்ட்டா எல்லைக் கடக்கும் கவுட்ஸ் என்ற இடத்தில் நாட்டிற்குள் நுழைய முயன்ற போது, சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அதில் 228.14 கிலோகிராம் மெத்தாம்பேட்டமைன் இருந்து கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைமருந்துகளின் மதிப்பிடப்பட்ட மதிப்பு 28.5 மில்லியன் டொலர்கள். இது கனடா முழுவதும் பதிவுசெய்யப்பட்ட நில எல்லைக் கடப்புகளில் சிபிஎஸ்ஏவின் மிகப்பெரிய மெத்தாம்பேட்டமைன் கைப்பற்றல் ஆகும் என்று செய்தி வெளியீடு தெரிவித்துள்ளது.

கல்கரியை சேர்ந்த 38 வயதான லொரி ஓட்டுநர் கட்டுப்படுத்தப்பட்ட மருந்துகள் மற்றும் பொருட்கள் சட்டத்தின் கீழ் இரண்டு வெவ்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். அவர் பெப்ரவரி மாதம் லெத்பிரிட்ஜில் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.