Reading Time: < 1 minute
Tamil Business Directory
கிளிநொச்சி ஏ9 வீதியில் அமைந்துள்ள ஆணையிறவு பகுதியில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டிருந்த வீதி தடைகள் 17 வருடங்களுக்குப் பின்னர் நீக்கப்பட்டுள்ளன.
1952 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரால் போடப்பட்டிருந்த இந்த வீதி தடையை 2000ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகள் 3 நடவடிக்கை மூலம் ஆணையிறவு மீட்கப்பட்டு மீண்டும் அவ்வீதி திறக்கப்பட்டது.
இருப்பினும், அதன் பின்னர் 8 வருடங்களின் கழித்து, 2008 ஆம் ஆண்டு இராணுவத்தினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் பின்னர் மீண்டும் குறித்த வீதி சோதனைச் சாவடிகள் இடப்பட்டன.
இந்நிலையிலேயே தற்போது சுமார் 17 வருடங்களுக்கு பின்னர் ஆனையிறவு சோதனை சாவடி அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது.




