Reading Time: < 1 minute

16 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஆசிரியர் இன்று காலை களுத்துறை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

30 வயதான அவர், கணித பாடம் கற்பிக்கும் ஆசிரியர் எனவும் சந்தேக நபர் திருமணமானவர் என்றும் அவருக்கு எதிராக மனைவியும் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளானவர்களில் களுத்துறை பிரதேச பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவரின் மகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சந்தேகநபர் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் போது எடுத்த வீடியோ பதிவுகள் உள்ளிட்டவற்றைக் கொண்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அறிவித்துள்ளது.

குறித்த ஆசிரியர் வேறு இடங்களில் பிரத்தியேக வகுப்புகளை நடத்தியுள்ளார் என்றும் சிறுமிகளும் அங்கும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டார்களா இல்லையா என மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கூறியுள்ளது.

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகளுக்கு 1929 என்ற தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்துமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.