Reading Time: < 1 minute

கனடாவின் வின்னிபெக் நகரில் இடம்பெற்ற ஐந்து பேரின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Tamil Business Directory

ஜெமி பிலிக்ஸ் (Jamie Felix) என்ற நபர் மீது ஐந்து பேரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் விசாரணை நடைபெற்ற நிலையில், ஜூரி குழு அவரை இரண்டாம் நிலை கொலை (Second-degree murder) குற்றச்சாட்டின் கீழ் குற்றவாளி என அறிவித்தது.

நீதிமன்றத் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே, அவர் நீதிமன்றத்தில் பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

தனது ஆதரவாளர்களுடன் பேச முயன்றபோது பாதுகாப்பு அதிகாரிகள் தலையிட்டதால் அவர் ஆவேசமடைந்தார். இதன்போது ஒரு பாதுகாப்பு அதிகாரியை முகத்தில் குத்தியதாக கூறப்படுகிறது.

அதன்பின்னர் ஏற்பட்ட தள்ளுமுள்ளு நிலைமையில் அவரது சட்டை கிழிந்ததுடன், மற்றொரு அதிகாரி மிளகாய் தெளிப்பு (pepper spray) பயன்படுத்த எச்சரித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்னர் அதிகாரிகள் அவரை கட்டுப்படுத்தி கைவிலங்குகள் போட்டு நீதிமன்றத்திலிருந்து வெளியே அழைத்துச் சென்றனர்.

இந்த வழக்கை நீதிபதி அலெய்ன் ஹிபிரேடியு தலைமையிலான நீதிமன்றம் விசாரித்தது.

இந்த கொலைச் சம்பவம் 2023 நவம்பர் 26 ஆம் தேதி வின்னிபெக் நகரின் வெஸ்ட் பிராட்வே பகுதியில் உள்ள பல குடியிருப்புகள் கொண்ட கட்டிடத்தில் இடம்பெற்றது.

சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஐந்து பேரைக் கண்டனர். அவர்களில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் இருந்தனர். மேலும் மூவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது பின்னர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தில் ஷான் மார்கோ (Sean Marko) மூன்று முறை சுடப்பட்டதில் ஏற்பட்ட காயங்களுடன் உயிர் தப்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வழக்கு கனடாவில் பெரும் அதிர்வை ஏற்படுத்திய கொலைச் சம்பவங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.