Reading Time: < 1 minute
Tamil Business Directory
ரொறன்ரோவின் கிழக்குப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் பெருந்தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைத்துப்பாக்கிகள், போலி துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கி தோட்டாக்கள் என்பன இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
20 வயதான சந்தீப் சிங், 51 வயதான அமிர்க் சிங், 50 வயதான ஹார்பிரிட் கவுர் மற்றும் 29 வயதான ராஜ்வன்ட் கவுர் ஆகியோர் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.




