Reading Time: < 1 minute
Tamil Business Directory
ரொறன்ரோவில் மருத்துவர்களுக்கு கடுமையான பற்றாக்குறை நிலைமை உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக குடும்ப நல மருத்துவ துறையில் இவ்வாறு மருத்துவர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குடும்பநல மருத்துவத்துறைக்கு போதியளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
புதிதாக மருத்துவத்துறையில் இணைந்து கொள்ளும் மருத்துவர்களும் குடும்பநல மருத்துவத்துறையை தெரிவு செய்வதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
மருத்துவர்களுக்கு உரிய சலுகைகள் வழங்கப்படுவதில்லை எனவும் இதனால் நோயாளர்கள் சிரமங்களை எதிர்நோக்க நேரிடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.




