Reading Time: < 1 minute

கனடாவின் மிசிசாகா நகரில் மாலை இருவர் கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

Tamil Business Directory

இந்த சம்பவம், பாய்லன் சாலை மற்றும் டெல்ஃபோர்டு வேயில் அமைந்துள்ள பகுதியில், டெர்ரி மற்றும் ப்ரமலியா சாலைகளுக்கு அருகில் மாலை 6.30க்கு பிறகு நடைபெற்றது.

பீல் பிராந்திய காவல்துறையினரினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

அங்கு இரண்டு ஆண்கள் காயங்களுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் இருவரும் தீவிர காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

பின்னர், அவர்கள் நிலைமை தற்போது நிலைத்த நிலையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

காயமடைந்த இருவரும் உயிருக்கு ஆபத்து இல்லாத நிலைமையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் எதனால் ஏற்பட்டது மற்றும் அதற்கு முன் என்ன நடந்தது என்பதை பற்றி தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் தகவல் உள்ளவர்கள், பீல் போலீசாரை அல்லது கிரைம் ஸ்டாப்பர்ஸ் சேவையை அநாமதேயமாக தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.