Reading Time: < 1 minute

மன்னாரில் கேரள கஞ்சாவுடன் இரண்டு பேர் மன்னார் மாவட்ட பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tamil Business Directory

குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் முன்னெடுத்த சோதனையில் மன்னார் மற்றும் தலைமன்னார் பிரதான வீதி ஆகிய இடங்களில் குறித்த இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, அவர்களிடம் இருந்து 16 கிலோ கிராமுக்கும் அதிக நிறையுடைய கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யபட்டிட்டவர்கள் மன்னாரை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் 37 வயது மற்றும் 28 வயதுடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.