Reading Time: < 1 minute

கொரோனா வைரஸ் (கொவிட்-19) கட்டுப்பாடுகளை மீறுவோருக்கான புதிய பொது சுகாதார உத்தரவுகள் நடைமுறைக்கு வந்துள்ளன.

Tamil Business Directory

இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த உத்தரவுகளின் படி, கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு கிட்டத்தட்ட 500 டொலர்கள் வரை அபாரதம் விதிக்கலாம்.

தனிமைப்படுத்தப்படுவது ஏற்கனவே கட்டாயமாக உள்ளது. மேலும், மேலும் பல படிகளின் மூலம் மக்களை அபராதம் செலுத்தும் அதிகாரம் மாகாணத்திற்கு ஏற்கனவே உள்ளது என்று தலைமை மாகாண பொது சுகாதார அதிகாரி டாக்டர் ப்ரெண்ட் ரூசின் தெரிவித்தார்.

ஆனால், புதிய உத்தரவுகள் விதிகளை மீறினால் உடனடியாக 486 டொலர்கள் அபராதம் விதிக்க அனுமதிப்பதன் மூலம் இந்த செயல்முறை எளிதாகின்றது.