Reading Time: < 1 minute

பிரித்தானிய இளவரசர் ஹரி இந்த வாரம் கனடாவின் டொரொண்டோவிற்கு விஜயம் செய்ய உள்ளார். இளவரசர் ஹரியின் அலுவலகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

Tamil Business Directory

இளவரசர், இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களை ஆதரிக்கும் அறக்கட்டளை அமைப்பின் அழைப்பின் பேரில், நினைவுநாள் தொடர்பான நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக விஜயம் செய்ய உள்ளார்.

எனினும், அவர் நினைவுநாள் நடைபெறும் நாளில் (நவம்பர் 11) எந்த நிகழ்விலும் கலந்து கொள்ளமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமையிலிருந்து தொடங்கி இரண்டு நாட்கள் டொரொண்டோவில் தங்கி, கனடிய ஆயுதப்படைகள் மற்றும் முன்னாள் இராணுவ வீரர்களுக்கான பல நிகழ்வுகளில் பங்கேற்பார் என அவரது அலுவலகம் அறிவித்துள்ளது.

ஹாலோ ட்ரஸ்ட் என்ற அமைப்பின் நிதி திரட்டும் தனியார் நிகழ்வில் இளவரசர் ஹரி கலந்து கொள்வார் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அமைப்பு போருக்குப் பிறகு நிலமைகள் மற்றும் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதே அமைப்புக்கு அவரது தாய், மறைந்த இளவரசி டயானாவும் 1990களில் பொதுவாக ஆதரவு வழங்கியிருந்தார்.

ஹாரி சன்னிப்ரூக் மருத்துவமனையின் முன்னாள் வீரர் மையத்தை (Veterans Centre) பார்வையிட்டு, இரண்டாம் உலகப்போரிலும் கொரியப் போரிலும் பங்கேற்ற வீரர்களுடன் உரையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.