Reading Time: < 1 minute

கனடாவின் ஹால்டன் பிராந்திய காவல் துறை (Halton Regional Police Service) அவசரமற்ற தொலைபேசி அழைப்புகளை நிர்வகிக்க தானியங்கி செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

Tamil Business Directory

911 அவசர அழைப்புகள் தொடர்ந்தும் மனித முகவர்கள் (live agents) மூலம் மட்டுமே பராமரிக்கப்படும் எனவும், ஆனால் அவசரமற்ற அழைப்புகள் இனி “SARA (Smart Answering Routing Assistant)” எனப்படும் நுண்ணறிவு குரல் உதவியாளர் மூலம் நிர்வகிக்கப்படும் எனவும் வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

அழைப்பாளர்களிடம் சில குறுகிய கேள்விகள் கேட்டு, அவர்களின் கேள்வி அமைப்பால் தீர்க்கக்கூடியதா அல்லது நேரடி அதிகாரிக்கு மாற்ற வேண்டியதா என்பதை SARA தீர்மானிக்கும். இந்த உரையாடல் நேரடியாக பதிவு செய்யப்பட்டு உரை வடிவில் மாற்றப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவசரநிலை ஏற்படும் சூழ்நிலை, அழைப்பாளர் ஆங்கிலம் பேச முடியாதது, மொழிபெயர்ப்பு தேவைப்படுவது, அமைப்பு கேள்வியை புரிந்துகொள்ளாதது, அல்லது சந்தேகத்திற்கிடமான நடத்தை கண்டறியப்பட்டால் — உடனடியாக மனித முகவருக்கு (live agent) மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SARA அமைப்பின் செயல்திறனை நாங்கள் நம்புகிறோம். தற்போது ஆண்டுக்கு சுமார் 1,60,000 அவசரமற்ற அழைப்புகள் கிடைக்கின்றன.

இந்த புதிய தொழில்நுட்பம் அவற்றை வேகமாக கையாள உதவும்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.