Reading Time: < 1 minute

சஸ்காட்செவனில் 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயோதிபர்களிடையே கொரோனா வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை வேறு எந்த வயதினரையும் விட மிக வேகமாக அதிகரித்து வருகிறது.

Tamil Business Directory

பராமரிப்பு இல்லங்களில் வைரஸ் தொற்று வீதம் அதிகரித்துவரும் நிலையில், இந்த அதிகரிப்பு வெளியாகியுள்ளது.

சமீபத்திய வெளியான மாகாண புதுப்பித்தலின் படி, 80 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரிடையே ஒட்டுமொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 213 ஆகும். இது ஒரு வாரத்திற்கு முன்பு இருந்ததைவிட 69 சதவீதம் அதிகரித்துள்ளது.

மற்ற வயதினரிடையே தொற்றுகள் 126ஆக இருந்தன. ஒப்பிடுகையில், சுகாதார அதிகாரிகளால் அளவிடப்பட்ட நான்கு இளைய வயதினரின் வாரத்திற்கு சராசரியாக வார அதிகரிப்பு 30 சதவீதமாகும்.