Reading Time: < 1 minute

மெற்றோ லிங் போக்குவரத்து நிறுவனம் கோவிட் தொற்றால் கோ போக்குவரத்து கழக 64 வயது சுத்திகரிப்பு ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவித்துள்ளது.

மெற்றோ லிங்கின் பேச்சாளர் Anne Marie Aikins உயிரிழந்தவரின் குடும்பத்திற்க்கு தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததுடன், கடந்த பதினோறு வருடங்களாக பணிபுரிந்த குறித்த நேர்மையான ஊழியரை தாம் இழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

குறித்த உயிரிழந்த பணியாளர் பணியில் வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக தெரியவில்லை என்று அவர் கூறினார்.

புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், மெட்ரோலின்க்ஸ் 4,300 ஊழியர்களில் 67 ஊழியர்கள் COVID-19 ஆல் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.