Reading Time: < 1 minute

சஸ்காட்செவனைச் சேர்ந்த சில இளைஞர் ஹொக்கி அணிகள், இந்த மாத தொடக்கத்தில் மனிடோபாவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொண்டதற்காக கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளன.

சஸ்காட்செவனில் உள்ள கொவிட்-19 விதிகள் மாகாணத்திற்கு வெளியே பயணங்களுக்கு போட்டிகளை அனுமதிக்காது.

ஆனால், சஸ்காட்செவனில் இருந்து சில அணிகள் வட அமெரிக்க ஹொக்கி கிளாசிக் தொடரில் பங்கேற்க, வின்னிபெக் நகருக்கு பயணம் செய்தன.

இதனால் கொவிட்-19 விதிகளை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில், மாகாணத்தின் வீரர்களைக் கொண்ட சஸ்காட்செவன் ஹொக்கி அசோசியேஷனின் தலைவர், மற்ற இரண்டு அமைப்புகளைச் சேர்ந்த மொத்தம் ஐந்து அணிகள் விமர்சிக்கப்பட்டுள்ளன.