Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவில் மற்றுமொரு தீயணைப்புப் படைவீரர் , காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் வடகிழக்கு பகுதியில் காட்டுத் தீயில் சிக்கிகுண்டு இந்த தீயணைப்பு படைவீரர் உயிரிழந்துள்ளார்.
காட்டுத் தீயினால் இதுவரையில் கனடாவில் நான்கு தீயணைப்புப் படைவீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஒன்றாரியோவைச் சேர்ந்த 25 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவில் இம்முறை காட்டுத் தீ காரணமாக அதிகளவான சேதங்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




