Reading Time: < 1 minute

கல்கரியைத் தாக்கிய ஆலங்கட்டி மழை, குறைந்தது 1.2 பில்லியன் டொலர் காப்பீட்டு சேதங்களைச் சந்தித்துள்ளது.

Tamil Business Directory

இது கனடாவின் வரலாற்றில் நான்காவது விலையுயர்ந்த பாதிப்பை ஏற்படுத்திய இயற்கை பேரழிவாகும் என்று கனடாவின் காப்பீட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பணியகத்தின் மேற்கு துணைத் தலைவர் செலீஸ்டே பவர் கூறுகையில், ‘நாங்கள் மிகவும் விலையுயர்ந்த பாதிப்பை ஏற்படுத்திய ஆலங்கட்டி மழையைப் பார்க்கிறோம். தரையில் வசிப்பவர்கள் இதை மீண்டும் கட்டியெழுப்பும்போது ஆச்சரியப்படுவதில்லை என்று நான் நினைக்கிறேன்’ என கூறினார்.

ஜூன் 13ஆம் திகதி புயல், வடகிழக்கு கல்கரி, ஏர்டிரி மற்றும் ராக்கி வியூ கவுண்டியை கடுமையாக தாக்கியது.

இது குறைந்தது 70,000 வீடுகளையும் வாகனங்களையும் சேதப்படுத்தியது. மேலும் முழு பயிர்களையும் அழித்தது. ஏனெனில் ஆலங்கட்டி மழை டென்னிஸ் பந்துகளின் அளவை கொண்டது. இது குறைந்தது மணிக்கு 80 முதல் 100 கிமீ வேகத்தில் கீழே விழும்.

1.2 பில்லியன் டொலர் ஒரு ஆரம்ப மதிப்பீடு ஆனால் இது உயரக்கூடும் என்று செலீஸ்டே பவர் கூறினார். எதிர்வரும் மாதங்களில் மொத்த செலவுகள் இறுதி செய்யப்படும்.