Reading Time: < 1 minute

கல்கரியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் கொல்லப்பட்டதுடன் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். கல்கரியின் வடகிழக்குப் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும் ஏனைய இரண்டு பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Martindale Boulevard பகுதியில் அமைந்துள்ள சீக்கிய ஆலயமொன்றுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருந்தால் அதனை வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

என்ன காரணத்திற்காக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது, சநதேக நபர்கள் யார் உயிரழந்தவரின் ஆள் அடையாள விபரங்கள் என்பன பறறிய தகவல்கள் இதுவரையில் வௌயிடப்படவில்லை.