Reading Time: < 1 minute

கனடாவின் புலனாய்வு முகவர் நிறுவனத்திற்கு புதிய பனிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். கனடிய பாதுகாப்பு புலனாய்வு சேவையின் புதிய பனிப்பாளராக டேனியல் ரொஜர்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

புலனாய்வு சேவையின் பணிப்பாளராக கடமையாற்றி வந்த டேவிட் விக்னலட் ஓய்வு பெற்றதை தொடர்ந்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு தலையீடுகளிலிருந்து பாதுகாத்தல், தொடர்பாடல் கட்டமைப்புகள் தொடர்பில் கவனம் செலுத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை இந்த பாதுகாப்பு புலனாய்வு சேவை முன்னெடுத்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.