அவசர நேரங்களில் பொதுமக்களுக்கு எச்சரிக்கைகள் வழங்கப்படும் கனடாவின் தேசிய “அலர்ட் ரெடி” (Alert Ready) அமைப்பின் சோதனை வரும் புதன்கிழமை நாடு முழுவதும் நடத்தப்பட உள்ளது.
இந்த சோதனை, கியூபெக் மாகாணத்தை தவிர்த்து மற்ற எல்லா மாகாணங்களிலும் மற்றும் பிரதேசங்களிலும் நடைபெறும்.
மாகாண அல்லது பிராந்திய அவசர மேலாண்மை அமைப்புகள் வெளியிடும் சோதனை செய்திகள், தொலைக்காட்சி, வானொலி மற்றும் ஸ்மார்ட்போன்கள் போன்ற வயர்லெஸ் சாதனங்களில் பகிரப்படும்.
அவசர நிலையை ஒத்ததாக அமைக்கப்பட்ட இந்தச் செய்திகள், தனித்துவமான அலர்ட் சத்தத்துடன் ஆரம்பமாகும். இது ஒரு உண்மையான அவசர எச்சரிக்கை அல்ல,
பொதுமக்களுக்கு அமைப்பின் செயல்பாடு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படுகிறது.
மாகாண வாரியாக சோதனை நேரங்கள் பின்வருமாறு:
- அல்பேர்டா – பிற்பகல் 1:55 (MDT)
- பிரிடிஷ் கொலம்பியா – பிற்பகல் 1:55 (PDT)
- மானிட்டோபா – பிற்பகல் 1:55 (CDT)
- நியூ ப்ரன்ஸ்விக் – காலை 10:55 (ADT)
- நியூபவுண்லாண்ட் மற்றும் லாப்ரடோர் – காலை 10:45 (NDT)
- நார்த் வெஸ்ட் டெரிடோரிஸ் – காலை 9:55 (MDT)
- நோவா ஸ்கோஷியா – பிற்பகல் 1:55 (ADT)
- நுனாவுட் – பிற்பகல் 2:00 (EDT)
- ஒன்ராரியோ – பிற்பகல் 12:55 (EDT)
- பிரின்ஸ் எட்வர்ட் தீவு – பிற்பகல் 12:55 (ADT)
- சஸ்காச்செவன் – பிற்பகல் 1:55 (CST)
- யுகோன் – பிற்பகல் 1:55 (YST)
2024-ஆம் ஆண்டிலிருந்து, இந்த அலர்ட் ரெடி அமைப்பு 877 அவசர எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.
இதில், கடுமையான சூழ்நிலை எச்சரிக்கைகள், புயல், வெள்ளம், குழந்தைகள் கடத்தப்பட்டால் வழங்கப்படும் AMBER எச்சரிக்கைகள் ஆகியவை அடங்கும். பொதுமக்கள் இந்த அவசர எச்சரிக்கைகளை நிராகரிக்க முடியாது.
ஆனால், சில மொபைல் சாதனங்களில் (LTE அல்லது 5G இணைப்பு இல்லாதவை) அவை தோன்றாமலும் இருக்கலாம்.




