Reading Time: < 1 minute

கனடாவில் அரசாங்க அதிகாரிகளினால் கவனக்குறைவினால், எட்டு வயது சிறுமியொருவர் கடவுச்சீட்டு புதுப்பித்துக்கொள்ள முடியாது போயுள்ளது.

Tamil Business Directory

ரொறன்ரோவைச் சேர்ந்த தம்பதியனர் ஆறு ஆண்டுகளுக்கு முன்னதாக சிறுமியொருவரை தத்தெடுத்துள்ளனர்.

அவர்கள், ஜமெய்க்காவிற்கு விடுமுறையை கழிப்பதற்காக மகளின் கடவுச்சீட்டை புதுப்பிக்க முயற்சித்துள்ளனர்.

இந்த சிறுமி தென்ஆபிரிக்காவிலிருந்து தத்தெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அந்த சிறுமி எந்த நாட்டில் பிறந்தார் என்பது குறித்த விடயத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தென்ஆபிரிக்காவில் பிறந்த குழந்தை தவறுதலாக சுவாசிலாந்தில் பிறந்ததாக பதிவிடப்பட்டுள்ளது.

சிறுமியின் கடவுச்சீட்டை புதுப்பித்துக்கொள்ளமுடியாத காரணத்தினால் ஒட்டுமொத்த குடும்பத்தினரதும் விடுமுறைப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதிகாரிகளின் கவனக்குறைவினால் இவ்வாறு ஓர் நிலைமை ஏற்பட்டதாக பெற்றொர் குற்றம் சுமத்தியுள்ளனர்.