Reading Time: < 1 minute

கனடாவின், டொராண்டோ ஸ்கார்பரோவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 14 வயது சிறுவன் காயமடைந்துள்ளார்.

Tamil Business Directory

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். லாரன்ஸ் அவென்யூ கிழக்கு மற்றும் வார்டன் அவென்யூ பகுதியில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

14 வயது சிறுவன் ஒருவன் டிடிசி பேருந்தில் ஏறியபோது, இரு ஆண்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளது. மூன்று இளைஞர்களும் பேருந்திலிருந்து இறங்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அப்போது, சந்தேக நபர்களில் ஒருவர் துப்பாக்கியைக் காட்டி, 14 வயது சிறுவனை நோக்கி பல முறை சுட்டதாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட சிறுவன் காலில் துப்பாக்கிக் குண்டு காயம் ஏற்பட்டு, அப்பகுதியிலிருந்து தப்பிக்க முயன்றபோது, இரு சந்தேக நபர்களும் அவரைத் தொடர்ந்து சென்று உடல் ரீதியாக தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

14 வயது சிறுவன் உயிருக்கு ஆபத்து இல்லாத காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில், விக்டோரியா பார்க் அவென்யூ மற்றும் பின்ச் அவென்யூ கிழக்கு பகுதியில் 15 மற்றும் 16 வயதுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.