Reading Time: < 1 minute

கனடாவில் வாடகைக் குடியிருப்பாளர்கள் பெரும் நிதி நெருக்கடி நிலைமையை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tamil Business Directory

ஒப்பீட்டளவில் வீட்டு உரிமையாளர்களை விடவும் வாடகைக் குடியிருப்பாளர்கள் இந்த நெருக்கடிகளை எதிர்நோக்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டு உரிமையாளர்கள் குத்தகைக் கடன் தொகை அதிகரிப்பு காரணமாக எதிர்நோக்கும் நெருக்கடிகளை விடவும் வாடகைக் குடியிருப்பாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குத்தகை கடன் பெற்றுக்கொண்டவர்களை விடவும் ஏனைய கடன் பெற்றுக்கொண்டவர்கள் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் தொடர்ச்சியாக வாடகைத் தொகைகள் அதிகரித்துச் செல்வதாகவும் இதனால் வாடகைக் குடியிருப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.