Reading Time: < 1 minute

கனடாவில் வரலாறு காணாத அளவில் பணவீக்கம் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் வருடாந்த பணவீக்க வீதம் ஐந்து வீதமாக உயர்வடைந்துள்ள நிலையில், கடந்த 30 ஆண்டுகளில் முதல் முறையாக இவ்வாறு பணவீக்கம் ஏற்பட்டுள்ளது.

இதன்படி கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வருடாந்த பணவீக்க வீதம் 4.8 வீதமாக காணப்பட்டது.

இதன்போது இந்த ஆண்டில் அது 5.2 வீதமாக உயர்வடைந்துள்ளது. மேலும் வீடுகள், எரிபொருட்கள் மற்றும் மளிகை பொருட்களது விலைகளின் அதிகரிப்பே இவ்வாறு பணவீக்கம் ஏற்படக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.