Reading Time: < 1 minute

கனடாவின் நோவாஸ்கோசியா பிராந்தியத்தில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

Tamil Business Directory

மர்மமான முறையில் இந்த இருவரும் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

58 வயதான ஆண் ஒருவரும் 49 வயதான பெண் ஒருவரும் வீடொன்றில் உயிரிழந்து கிடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த உயிரிழந்தவர்களின் ஆள் அடையாள விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இந்த மரணங்கள் சந்தேகத்திற்கிடமானவை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.