Reading Time: < 1 minute

2024 ஆம் ஆண்டில் கனடாவின் பொலிஸ் திணைக்களத்தைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது ஒழுக்கக்கேடு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Tamil Business Directory

இதன் விளைவாக, குறைந்தது 20 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டதோடு, சிலர் ராஜினாமா செய்ய உத்தரவிடப்பட்டுள்ளனர்.

2024 ஆண்டில் மொத்தம் 443 ஒழுக்கக்கேடு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில் 408 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்புபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த வழக்குகளில் சுமார் நான்கில் ஒரு பகுதி “கடுமையான” ஒழுக்க நடவடிக்கைகளாக முடிவடைந்துள்ளன.

அதில் பதவி உயர்வுக்கு தகுதியற்றவர்களாக அறிவிக்கப்படுதல் அல்லது 80 மணி நேரத்திற்கும் அதிகமான சம்பளத்தை இழக்கச் செய்யப்படுதல் போன்ற தண்டனைகள் இடம்பெறுகின்றன.

ஒழுக்கக்கேடு வழக்குகளில் சுமார் 5 சதவீதம், அதாவது 22 வழக்குகள், பணிநீக்கம் அல்லது ராஜினாமா செய்ய உத்தரவிடுதல் போன்ற கடுமையான முடிவுகளுடன் முடிந்துள்ளன.

அதேநேரத்தில், 70 சதவீதத்திற்கும் அதிகமான வழக்குகளில், சிறப்பு பயிற்சி, நெருங்கிய மேற்பார்வை அல்லது தாமதமான பதவி உயர்வு போன்ற சீரமைப்பு மற்றும் திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.