Reading Time: < 1 minute

கனடாவின் ஒஷாவா பகுதியில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அந்த பெண்ணின் கணவர் போலீசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். டர்ஹம் பிராந்திய போலீசார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

48 வயதான பெண் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வீட்டில் கிடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிர்காப்பு முதலுதவிகளை வழங்கி வைத்தியசாலையில் அனுமதித்த போதும் குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சில நிமிடங்களில் உயிரிழந்துள்ளார்.

இந்த படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 41 வயதான குறித்த பெண்ணின் கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த இருவருக்கும் இரண்டு பிள்ளைகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் பிள்ளைகளுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.

இந்த படுகொலை சம்பவம் பிரதேச மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் தங்களது அதிர்ச்சியையும் கவலையையும் பிரதேச மக்கள் வெளியிட்டுள்ளனர்.