Reading Time: < 1 minute

கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியாவின் பிரபல தொடர் கொலையாளி மீது சிறைச்சாலையில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Tamil Business Directory

பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த ரொபர்ட் பிக்டோன் என்ற நபர் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கியூபெக்கின் அதியுச்ச பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கொண்ட போர்ட் கார்டியார் சிறையில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தும்புத்தடியினால் மற்றுமொரு கைதி இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதல் நடத்திய கைதி ஏற்கனவே வேறும் கைதிகளையும் தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆறு பேரை படுகொலை செய்த குற்றத்திற்காக பிக்டோனுக்கு கனடிய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

சிறைச்சாலைக்குள் இந்த தாக்குதல் இடம்பெற்றமை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.