கனடாவில் கோடைக்கால நேர மாற்றம் (Daylight Saving Time) இந்த வார இறுதியில் அமலுக்கு வருகிறது.
இதனால் கனடியர்கள் ஒரு மணி நேர உறக்கத்தை இழக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
பெரும்பாலான மாகாணங்களில், மார்ச் 8 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.00 மணிக்கு கடிகாரங்கள் ஒரு மணி நேரம் முன்னோக்கி மாற்றப்படுகின்றன.
வசந்த மற்றும் கோடைக்காலங்களில் மாலை நேரங்களில் அதிக நேரம் சூரியஒளி கிடைக்கப் பெறுவதற்காக இந்த நேர மாற்றம் ஏற்பாடு செய்யப்படுகிறது.
தானியங்கி நேர அமைப்புடன் இருக்கும் ஸ்மார்ட்போன்களில் நேரம் தானாக மாற்றப்படும்.
ஆனால் அலாரம் கடிகாரம் அல்லது கைக்கடிகாரம் பயன்படுத்துவோர், மார்ச் 7 சனிக்கிழமை இரவே நேரத்தை மாற்றி வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கோடைக்கால நேரம் மார்ச் மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை முதல் நவம்பர் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நடைமுறையில் இருக்கும். அதன் பின்னர் மீண்டும் சாதாரண நேரத்திற்கு கடிகாரங்கள் மாற்றப்பட்டு, ஒரு மணி நேரம் கூடுதல் உறக்கம் கிடைக்கும்.
தற்போது யூகன் (Yukon), சஸ்காட்சுவான் மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் ஒன்டாரியோ, கியூபெக், நுனாவுட் ஆகிய மாகாணங்களின் சில பகுதிகள் நேர மாற்றத்தை பின்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.