Reading Time: < 1 minute

கனடாவின் ரொரன்றோவில் தீவைத்துக் கொளுத்தப்பட்ட ஒரு பெண் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Tamil Business Directory

கடந்த வெள்ளியன்று தீ தொடர்பான புகார் ஒன்றின்பேரில் பொலிசார் Scarboroughவிலுள்ள வீடு ஒன்றிற்கு அழைக்கப்பட்டார்கள்.

அங்கு சென்று பார்க்கும்போது, ஒரு பெண்ணும் ஒரு ஆணும் தீக்காயங்களுடன் இருப்பது தெரியவரவே, உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். இருவருக்கும் பயங்கர காயங்கள் இருந்தும், அந்த ஆணின் நிலைமை சீராக இருப்பதாக பொலிசார் பின்னர் தெரிவித்தார்கள்.

ஆனால், அந்தப் பெண் சனிக்கிழமை உயிரிழந்துவிட்டார். அந்தப் பெண்ணின் பெயர் Henrietta Viski (37) என பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

கூடவே மற்றொரு ஆணும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவரது நிலைமை என்ன என்று தெரியவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக ரொரன்றோவைச் சேர்ந்த Norbert Budai (38) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.