Reading Time: < 1 minute

கனடாவில் குழந்தைகளுக்கான இனிப்புப் பண்டங்களில் ஊசிகள் காணப்பட்டமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tamil Business Directory

பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாகாணத்தின் மேலும் இரண்டு நகரங்களில் உள்ள பெற்றோர் தங்களது குழந்தைகளின் ஹாலோவீன் இனிப்புப் பண்டங்களில் தையல் ஊசிகள் இருந்ததாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.

கம்லூப்ஸ் (Kamloops) மற்றும் ராஸ்லாண்ட் (Rossland) நகரங்களில் சமீபத்தில் இந்த முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாகாணத்தின் ஆறு நகரங்களில் இதுபோன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

முன்னெச்சரிக்கை

பெற்றோர், தங்களது குழந்தைகள் கடந்த வெள்ளிக்கிழமை இரவில் பெற்றுக் கொண்ட மிட்டாய்களை கவனமாக ஆய்வு செய்யுமாறு கேட்டுக்கொண்டது.

இந்த புகார்கள் உண்மையா அல்லது தவறான தகவல்களா என்பதை கூறுவது இப்போதைக்கு முடியாது. ஆனால் பெற்றோர் முன்னெச்சரிக்கையாக நடக்க வேண்டும்,” என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒரு சிறிய கிட்ட்காட் (KitKat) சாக்லேட் பட்டியில் ஒரு ஊசி குத்தியிருந்த புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

அந்த சாக்லேட்டின் பேக்கேஜிங் வெளியில் பார்த்தால் மூடப்பட்டபோல தெரியும், ஆனால் அதில் ஊசி மறைந்து இருந்தது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், ராஸ்லாண்ட் நகரில் கண்டெடுக்கப்பட்ட மிட்டாயில் “தீங்கிழைக்கும் நோக்கம்” இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த மிட்டாய் தவறுதலாக தையல் பொருட்களுடன் கலந்து போயிருக்கலாம் என்றும், அதில் நூல் (thread) இணைந்திருந்ததாகவும் கூறப்பட்டது.