Reading Time: < 1 minute

ஒன்றாரியோவில் சில மாதங்களின் பின்னர் எரிபொருளின் விலை உயர்த்தப்படவுள்ளது.

Tamil Business Directory

தென் ஒன்றாரியோ பகுதிகளில் இவ்வாறு எரிபொருள் விலை உயர்த்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் பெற்றோலின் விலை 10 சதங்களினால் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த நவம்பர் மாதம் 15ம் திகதியின் பின்னர் முதல் தடவையாக இவ்வாறு பெற்றோலின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

ஒரு லீற்றர் பெற்றோல் தற்பொழுது 156.5 சதங்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், நாளை ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 164.9 சதங்களாக விற்பனை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மாதங்களில் எரிபொருட்களின் விலைகள் மேலும் உயர்த்தப்படும் சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மாகாணத்தின் சில பகுதிகளில் எரிபொருட்களின் விலைகள் குறைவாக காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.