Reading Time: < 1 minute

கடந்த ஏப்ரல் மாதத்தில் கனேடியர்கள் அமெரிக்காவுக்கு மேற்கொண்ட பின்னணி பயணங்களில் மிகுதியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Tamil Business Directory

அமெரிக்காவில் இருந்து கார் மூலம் திரும்பிய கனேடியர்களின் எண்ணிக்கை கடந்த வருடம் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 35.2% குறைந்து 12 இலட்சமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இது, தொடர்ச்சியாக நான்காவது மாதமாக வருடத்துக்கு வருடம் கணிக்கும்போது வீழ்ச்சியை காட்டுகிறது.

இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கனேடிய பொருட்களுக்கு விதித்துள்ள வரிகள் மற்றும் “கனடாவை 51வது அமெரிக்க மாநிலமாக்க வேண்டும்” என்ற அவரது அறிக்கைகள் காரணமாகக் காணப்படுகிறது.

இதனால் கனடியர்கள் அமெரிக்கா செல்லும் திட்டங்களை திரும்பப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதே நேரத்தில், ஏப்ரல் மாதத்தில் விமானம் மூலம் அமெரிக்காவிலிருந்து திரும்பிய கனடியர்களின் எண்ணிக்கை 582,700 ஆக, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 19.9% குறைந்துள்ளது.

மொத்தமாக, விமானம் மூலம் திரும்பிய கனடியர்களின் எண்ணிக்கையில் 1.7% இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பிற நாடுகளில் இருந்து திரும்பியவர்கள் எண்ணிக்கை 9.9% அதிகரித்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் விமானம் மற்றும் கார் மூலம் வந்த மொத்த சர்வதேச வருகைகள் (கனடியர்கள் மற்றும் வெளிநாட்டவர் உட்பட) 45 இலட்சமாக இருந்தது, இது கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 15.2% குறைவாகும் கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.