Reading Time: < 1 minute

ஸ்கார்பாரோவில் இடம்பெற்ற வாகன விபத்தில், இருவர் உயிரிழந்ததோடு, ஒருவர் காயமடைந்துள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tamil Business Directory

காயமடைந்தவர் உயிராபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்க்கம் வீதி மற்றும் புரோகிரஸ் அவென்யூ பகுதியில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.

இந்த விபத்திற்கு அதிவேகமே பயணித்து சாரதி கட்டுப்பாட்டை இழந்ததே காரணம் என பொலிஸாரின் அறிக்கை தெரிவிக்கின்றது.