Reading Time: < 1 minute

ரொறன்ரோ டவுன்டவுன் பகுதியில் போதைப்பொருள் அளவுக்கதிகமாகப் பயன்படுத்தியதால் ஏற்பட்ட அவசரநிலை சம்பவங்கள் திடீரென அதிகரித்துள்ளதாக Toronto Public Health எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tamil Business Directory

கடந்த வெள்ளிக்கிழமை, டவுன்டவுன் பகுதியில் ஓவர்டோஸ் தொடர்பான பல அவசரநிலை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவங்களுக்கு எந்த வகையான போதைப்பொருட்கள் காரணமாக இருக்கலாம் என்பது குறித்து அதிகாரிகள் இதுவரை உறுதியான தகவலை வெளியிடவில்லை.

ஆனால், கண்ணாடி போன்ற தோற்றமுடைய தெளிவான பொருள் ஒன்று அப்பகுதியில் கட்டுப்பாடற்ற போதைப்பொருள் விநியோகத்தில் புழக்கத்தில் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஓவர்டோஸ் சம்பவங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் அல்லது உயிரிழப்புகள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் Toronto Public Health தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் தொடர்பான அவசரநிலை ஏற்பட்டால் உடனடியாக 911-ஐ அழைக்குமாறு அதிகாரிகள் பொதுமக்களுக்கு நினைவூட்டியுள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.