Reading Time: < 1 minute

கனடாவின் முன்னாள் அமைச்சரவைக் அமைச்சர் பில் பிளேர், பிரிட்டனுக்கான கனடாவின் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

நாடாளுமன்றத்தின் உறுப்பினர் பதவியிலிருந்து பிளேர் விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிளேரை பிரதமர் மார்க் கார்னி நியமித்துள்ளதாக திங்கள் அன்று அறிவிக்கப்பட்டது.

பில் பிளேர், 2021 முதல் 2025 வரை பிரிட்டனுக்கான கனடா உயர்ஸ்தானிகராக பணியாற்றிய ரால்ஃப் குடேல் அவர்களின் இடத்தைப் பொறுப்பேற்க உள்ளார்.

குடேலும் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ காலகட்டத்தைச் சேர்ந்த நீண்டகால லிபரல் அமைச்சர் ஆவார். கடந்த ஆண்டு மே மாதம் வரை, பில் பிளேர் கனடாவின் தேசிய பாதுகாப்புத் துறை அமைச்சராக பணியாற்றினார்.

அதற்கு முன்னர், அவசர மேலாண்மை, எல்லைப் பாதுகாப்பு, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் தடுப்பு போன்ற முக்கிய துறைகளில் பதவி வகித்துள்ளார்.

அரசியலுக்கு முன்பு, அவர் டொரோண்டோ காவல் துறையின் தலைமை அதிகாரியாகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அதே அறிக்கையில் தேசிய பாதுகாப்பு மற்றும் உளவு ஆலோசகர் நத்தாலி ட்ரூயின் அவர்களை பிரான்ஸ் மற்றும் மோனாக்கோவுக்கான கனடா தூதராக நியமித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.