Reading Time: < 1 minute

கனடாவின் முன்னணி சுப்பர் மார்ட்களில் ஒன்றான Loblaw நிறுவனம் திருட்டைத் தடுக்க புதிய நடைமுறை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

Tamil Business Directory

பொருட்களை கொள்வனவு செய்யும் நுகர்வோர் ரசீதுகளை காண்பித்தால் மட்டுமே நுழைவாயில் திறக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நிறுவனங்களில் இடம்பெற்று வரும் திருட்டைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்ட ரசீது இல்லாதவர்கள் நுழைவாயிலை கடக்க முடியாத வகையில் மூடப்பட்டுள்ளது.

எனினும், இந்த நடவடிக்கை தொடர்பில் வாடிக்கையாளர்கள் தங்களது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.