Reading Time: < 1 minute

கொழும்பு, ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் உள்ள சர் பாரன் ஜயதிலக்க மாவத்தை மற்றும் ஜனாதிபதி மாவத்தை இன்று (27) முதல் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Tamil Business Directory

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் உத்தரவுக்கமைய இந்த வீதிகள் திறக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.