Reading Time: < 1 minute
Tamil Business Directory
லண்டனில் உள்ள எல்.எச்.எஸ்.சி பல்கலைக்கழக மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக கொவிட்-19 தொற்றுநோய் இல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ளது
லண்டனில் உள்ள எல்.எச்.எஸ்.சி பல்கலைக்கழக மருத்துவமனை, இது நவம்பர் முதல் முதல்முறையாக நோயை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியது என்று டுவீட் செய்துள்ளது.
‘நவம்பர் 10ஆம் திகதி முதல், எல்.எச்.எஸ்.சி பல்கலைக்கழக மருத்துவமனை முதன்முறையாக தொற்றுநோய் இல்லாமல் உள்ளது. ஊழியர்கள், மருத்துவர்கள் மற்றும் நம் சமூகத்தின் அயராத முயற்சிகளுக்கு நன்றி’ என பதிவிட்டுள்ளது.
இந்த பரவல்களின் விளைவாக இறந்த 23 நோயாளிகளின் குடும்பங்களுக்கு எல்.எச்.எஸ்.சி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. விரைவாக பரவியதன் விளைவாக அதன் 23 நோயாளிகள் உயிர் இழந்ததாக எல்.எச்.எஸ்.சி தெரிவித்துள்ளது




