Reading Time: < 1 minute

கிழக்கு எல்ம்வூட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tamil Business Directory

தற்போது இவர்கள் இருவரும் உயிராபத்தற்ற நிலையில், சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவ பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

50 ப்ரீவெட் வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நான்காவது மாடியில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயணைப்புப் படையினர் வருவதற்குள் குடியிருப்பாளர்கள் கட்டிடத்திலிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. மேலும், சேத மதிப்பீடுகள் எதுவும் வெளியாகவில்லை.