Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவில் இடம்பெற்ற விபத்தில் மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட நால்வர் காயமடைந்துள்ளனர்.
நோர்த் ஓபி லண்டன் ஸ்வர்ரா டவுன்ஷிப் பகுதியில் நேற்று(புதன்கிழமை) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இரண்டு கார்கள் மோதிக்கொண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இரண்டு வயது சிறுவன், ஆறு வயது சிறுவன், ஒன்பது வயது சிறுமி உள்ளிட்டவர்களே இந்த விபத்தில் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




