Reading Time: < 1 minute

கனடாவில் பணவீக்கம் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் என மக்கள் கவலை கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Tamil Business Directory

கனேடிய வங்கியினால் முன்னெடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

வர்த்தகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நிலைப்பாடு தொடர்பில் இந்தக் கருத்துக் கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களை விடவும் பணவீக்கம் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் என மக்கள் கருதுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பணியாளர்களை தக்க வைத்துக் கொள்ள அநேக நிறுவனங்கள் சம்பளத்தை அதிகரித்து செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக இவ்வாறு சம்பளங்கள் அதிகரிக்கப்படுவதனை அவதானிக்க முடிவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தொழிலாளர்களுக்கான தட்டுப்பாடு மற்றும் விநியோகச் சங்கிலி பிரச்சினைகளினால் விற்பனையில் வீழ்ச்சி ஏற்படும் என வர்த்தக நிறுவனங்கள் கருதுவதாக குறிப்பிடப்படுகின்றது.